Tuesday, February 16, 2010

பதில் கேள்வி பிப்ரவரி 16


















புனே குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்றி, துப்பு கொடுத்தா ஒரு கோடி பரிசு.
மத்தியஅரசு
எங்களால கண்டுபிடிக்க முடியலைன்னு, டிசன்டா சொல்றிங்க...

இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரபகிர்வு கொடுக்காவிட்டால், தி.மு.க., பார்த்து கொண்டு சும்மா இருக்காது
தமிழக முதல்வர் கருணாநிதி
திரும்பவும் அண்ணா நினைவிடத்தில், உண்ணாவிரதம் என்ற பெயரில் குடும்பத்தோட ரெஸ்ட் எடுக்க போறேன்னு செல்லுங்க...

மாதந்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்ய ஆலோசனை மத்தியஅரசு
இனி மாசமுழுவதும் ஆர்ப்பாட்டம், அறிக்கைகொடுப்பது என, எதிர்கட்சிகளுக்கு வேலை கொடுத்து, டயட் ஆக்கிருவிங்க போல....

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்த்தபின், தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க தேர்தல் கமிஷனிடம் மனு
எதிர்கட்சியா இருந்தாலும், மக்களுக்கு கிடைக்கும் 2000 ரூபாய், எல்லாருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்திருகிங்க போல...

மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பிடி கத்திரிக்காய்க்கு முற்றிலும் தடை.
மத்திய அரசு
பிடி கத்திரிக்கு தடை ஓகே... பீடிக்கு தடை எப்ப

கடந்த ஆண்டை விட விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அரிசி கிலோ 1 ரூபாய்க்கு வழங்குவது போல. காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தமிழகஅரசு வழங்கவேண்டும்.
பா.ம.க நிறுவனர் ராம்தாஸ்
கூட்டணியில சேத்துகிடுவாங்களான்னு தெரியாததால ரெம்ம குழம்பி, வீட்டு வீட்டுக்கு குழம்பு ஊத்தனுமின்னு செல்லுவீங்க போல.

குண்டு வெடிப்புக்கு காரணம், உள்துறையின் தோல்வி இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
தோல்வி இல்லை, மெத்தனபோக்குதான...

சிறையிலிருப்பவர் ஓட்டு போட முடியாது, தேர்தலில் போட்டியிடலாம். முன்னாள் தேர்தல் கமிஷ்னர் வேதனை.
100 ரூபாய் கட்டாதவர்கள் மின் இணைப்பு துண்டிப்பு ! லட்சக்கணக்கில் கட்டாதவர்கள் பட்டியல் மட்டும் வெளியிடுவர். இது தானே ஜனநாயக மரபு

Sunday, February 14, 2010

தண்ணீர்



தண்ணீரில் தெரியும் தேசிய ஒருமைப்பாடு
மாநிலங்களிடையே தண்ணீருக்காக, இனி யுத்தம் ஒன்றே பாக்கி.
மழைக்காலத்தில் வீணாக கடலிலே கலக்கும் நீரை முறைப்படி
சேமித்தாலே, தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை.
நதிகள் இணைப்பு திட்டமும் தேவையில்லை.
ஒரே ஊரில்(திருப்பூரில்) ஒரு புறம் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது;
மறுபுறம் குடிநீருக்காக ரோட்டில் குடும்பத்துடன் தவமிருக்கும் வாழ்க்கை.
என்று தீரும் இந்த அவலம்........

Saturday, February 13, 2010

யானை



  • யானை
யற்கை வாழிடத்தை விட்டு வந்த
ந்த யானைக்கு குழாயிலாவது தண்ணீர்...
யற்க்கையை அழிக்கும் மனிதர்களுக்கு
னி என்ன நிலையோ ?