Wednesday, February 8, 2012

நிலா




நிலவும் மேகமும் விளையாடும் கண்ணாமூச்சி

சூரியன்


சூரியன் பகலில் தன் கோபக்கனலை காட்டுவதற்கு அச்சாரமாய், இந்த மேகக்கண்களை சிவப்பாக்கி அதிகாலையில் துயில் எழுகிறானோ.

Friday, January 27, 2012

நொய்யலாறு

கொங்கு மண்டலத்தின் கூவம் ஆறாக கருத்தப்படும் காஞ்சிமாநதி (நொய்யலாறு ) தான் இது. மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வந்தாலும், டாலர் சிட்டி என பெயர் பெற்ற திருப்பூருக்கு வரும் வரை, இந்த ஆறு குழந்தையின் சிரிப்பு போல பிரகாசமாய்தான் இருக்கிறது. தொழில் வளர்ச்சி பெயரில் நல்ல ஆற்றை நரகமாக்கிவிட்டோம்.
மேலும் தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும் : நொய்யலாறு வரலாறு

Thursday, January 26, 2012

மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை

இதுதான் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளின் ‘பிளாக் தண்டர்’.

Wednesday, January 25, 2012

மரம்

இந்த பட்டு போன மரம், இனி துளிர்க்குமோ, அல்லது மக்கி மண்ணாகுமோ. நானும் ஒரு காலத்தில் வளமையாகதான் இருந்தேன், என்பதற்கு அடையாளமாக சில கூடுகளையும், சில காய்ந்த இலைகளையம் தாங்கி நிற்கிறது.

Wednesday, January 11, 2012

மயூரம்
































இந்த பெயருக்கே கம்பீரமான நடை என்று தான் பொருள்.
இந்த மயில்களும் கம்பீரமாய்தான் உலாவருகின்றன.

மாலுமி


பள்ளியில் கிடைக்காது இந்த படகோட்டும் அனுபவம். அதனால்தானோ பள்ளி விடுமுறையில் தெர்மாஸ்கோல் அட்டையை கட்டி படகுவடுகிறான் இந்த சிறுமாலுமி.

வண்ணத்து பூச்சி














இந்த வண்ணத்து பூச்சி தங்கள் சிறகு விரித்து பறந்தாலும்,
மலரில் அமர்ந்து தேன் பருகினாலும் பார்பவர்கள் கண்கள் பரவசமடையும்.